Sunday, April 5, 2009

இறைவா நீ இருக்கிறாயா?

தர்மத்தின் பக்கம் கடவுள் இருப்பார் என்பது
சகல மதங்களினதும் கோட்பாடு.
அறத்தின் வழி நிற்போருக்கு சோதனைகள் இருக்கும்
கைவிடப் பட மாட்டார்கள் என்பது
ஒவ்வொரு சமயத்திலும் உள்ள வரலாற்று கதைகளின்
பிரதான உட்பொருள்.
ஈழத்தமிழர்கள் வாழ்வில் இவை யாவும்
பொய்யாகிப் போயின.
சோதனைக் காலம் என்பதற்கு வரையறை இல்லையா?
ஒரு தலைமுறை வாழ்க்கைக் காலம் சோதனை என்றால்,
நிம்மதியை அனுபவிப்பது எப்போது?
மதத்தால் வேறுபடாமல்
மொழி, கலாச்சாரத்தால் ஒன்றுபட்டு
எம்மக்கள் போராடுவது
கடவுளே உனக்கு பிடிக்கவில்லையா?
இறைவனின் பெயரால் நாம் போராடவில்லை என
எம்மீது ஆத்திரமா?
சந்தேகம் வந்துவிட்டது பல ஆத்திகர்களுக்கு
இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா என்று ...................

No comments:

Post a Comment